கோவை : கொடிசியா புத்தகத் திருவிழாவின் 7-வது நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : கொடிசியா புத்தகத் திருவிழாவின் 7-வது நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோவை புத்தகத் திருவிழா கடந்த 19-ம் தேதி தோடங்கியது. வரும் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7-வது நாள் நிகழ்ச்சியில், சபா பவுண்டேசன் ஏற்பாடு செய்த கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கண்ணதாசன் எழுதி கெ.ஜே. ஜேஸூதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இசைக்கப்பட்டன. பாடல் எழுதப்பட்ட சூழல், பாடலின் இலக்கிய நயம், கண்ணதாசனின் தனிச்சிறப்புகள் ஆகியவற்றை கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா தொகுத்து வழங்கினார்.

பிரபல பாடகர்கள் எம்.ஜே. ஸ்ரீராம், பிபின், வானதி ஸ்ரீ, சபிதா ஆகியோர் பாடல்களைப் பாடிய நிகழ்வுகளும், திரைக்காட்சிகளும் எல்.இ.டி. ஸ்கீரினில் ஒளிபரப்பப்பட்டது. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா போன்ற மாபெரும் மேதைகள் உருவாக்கிய காலத்தால் அழியாத கீதங்களை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்தனர்.