திருப்பூர் : திருப்பூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வெங்காய மண்டியின் லாக்கரை உடைத்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வெங்காய மண்டியின் லாக்கரை உடைத்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் மேகர் அலி என்பவருக்கு சொந்தமான வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது. இதில், வெங்காயம், பூண்டு முதலியவை வாங்கி இருப்பு வைத்து மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. மண்டிக்கு அருகாமையிலே ஓட்டல், பிளைவுட் ஸ்டோர், மருந்துக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல, அப்பகுதியில் வியாபாரம் முடிந்து கடைகள் அடைக்கப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை வணிக நிறுவனங்களை திறக்க வந்தபோது ஓட்டல், பிளைவுட் கடை மற்றும் வெங்காய மண்டிகளில் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதில், வெங்காய மண்டியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளில் பணம் இல்லாததால் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த கடைகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் மேகர் அலி என்பவருக்கு சொந்தமான வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது. இதில், வெங்காயம், பூண்டு முதலியவை வாங்கி இருப்பு வைத்து மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. மண்டிக்கு அருகாமையிலே ஓட்டல், பிளைவுட் ஸ்டோர், மருந்துக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல, அப்பகுதியில் வியாபாரம் முடிந்து கடைகள் அடைக்கப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை வணிக நிறுவனங்களை திறக்க வந்தபோது ஓட்டல், பிளைவுட் கடை மற்றும் வெங்காய மண்டிகளில் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதில், வெங்காய மண்டியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளில் பணம் இல்லாததால் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த கடைகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.