கோவை : சிறுதுளி அமைப்பின் முயற்சியால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 3 நிமிடங்களில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கோவை : சிறுதுளி அமைப்பின் முயற்சியால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 3 நிமிடங்களில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

காடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இசட்.எஃப். வின்ட் பவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுதுளி அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தன.

அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பாரதி வனம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட கல்வு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, 3 நிமிடங்களில் 10,154 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இந்தத் திட்டத்தை சிறுதுளி அமைப்பின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதனிடையே, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன் கூறினார்.
