கோவை : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண்டித்து எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோவை : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண்டித்து எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
எஸ்.பி.ஐ.வங்கி பணியிடங்களுக்கான தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 28 மதிப்பெண் பெற்றால் போதும் என நிர்ணயித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தை 14 அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் ஈடுபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வங்கிக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

ஏற்கனவே, எஸ்.பி.ஐ. வங்கியில் உயர் பிரிவினர் அதிக அள்வில் உள்ள நிலையில், இந்த உத்தரவு அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் , இதனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், ”பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினர் விண்ணப்பத்ததன் காரணாமாகவே இந்த மதிப்பெண் நிர்ணயிக்கபட்டதாக எஸ்.பி.ஐ கூறியுள்ளது. அச்சமூகத்தில் ஏழைகள் குறைவாக இருப்பதை காட்டுகின்றனர். இதனை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த வங்கி முற்றுகைக் காரணமாக கோவை மத்திய ரயில்நிலையம் அருகே பரப்பான சூழல் நிலவியது.