நீலகிரி : உதகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் படகு இல்லம் மோகன் மீது மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
நீலகிரி : உதகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் படகு இல்லம் மோகன் மீது மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரகாஷுடன் (33) ஏற்பட்ட வாகனம் நிறுத்தம் தொடர்பாக பிரச்சனையால், அ.தி.மு.க. பிரமுகர் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல், அவர்களின் அலுவலகத்தில் புகுந்து, கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், வெளியான சி.சி.டி.வி. வீடியோவை அடிப்படையாக வைத்தும், ரவுடிசம் செய்த அ.தி.மு.க. படகு இல்லம் மோகன் மற்றும் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பி1 காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்ய தாமதம் ஆனதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, படகு இல்ல மோகன் என்றழைக்கப்படும் லாரன்ஸ் மோகனை, பாசறை மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். நேற்று இரவு அறிவித்தனர்.
உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரகாஷுடன் (33) ஏற்பட்ட வாகனம் நிறுத்தம் தொடர்பாக பிரச்சனையால், அ.தி.மு.க. பிரமுகர் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல், அவர்களின் அலுவலகத்தில் புகுந்து, கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், வெளியான சி.சி.டி.வி. வீடியோவை அடிப்படையாக வைத்தும், ரவுடிசம் செய்த அ.தி.மு.க. படகு இல்லம் மோகன் மற்றும் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பி1 காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்ய தாமதம் ஆனதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, படகு இல்ல மோகன் என்றழைக்கப்படும் லாரன்ஸ் மோகனை, பாசறை மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். நேற்று இரவு அறிவித்தனர்.