விளையாட்டுத் துறையில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் : பள்ளி மாணவர்களுக்கு டெல்டா கமோண்டர் அறிவுரை

கோவை : மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் அவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது என்பதால், விளையாட்டுத்துறையில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு டெல்டா கமோண்டர் ஏசன் அறிவுரை வழங்கினார்.

கோவை : மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் அவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது என்பதால், விளையாட்டுத்துறையில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு டெல்டா கமோண்டர் ஏசன் அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் செயல்படும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 19 ஆம் ஆண்டு விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், மத்திய டெல்டா படைத்தளபதி ஏசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.



பின்னர் நிகழ்ச்சியில் டெல்டா தளபதி ஏசன் பேசியதாவது :- கல்வி மட்டுமின்றி விளையாட்டும் ஒருவனை வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்யும். விளையாட்டு என்பது அவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டதால், விளையாட்டுத் துறையில் மாணவர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். இன்று தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் தகுதியை வளர்த்திக் கொண்டு விளையாட்டுத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று தங்களது தகுதியினை உயர்த்திக் கொள்ள வேண்டும். கல்வி மட்டுமல்ல விளையாட்டும் ஒருவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது இன்று நமது இந்தியாவில் ஏராளமானோர் சாதித்துக் காட்டியுள்ளனர், என பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன்தாஸ், பள்ளி முதல்வர் சுகுனாதேவி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....