ஈரோடு : சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் துப்பாக்கிகளை சோதனை செய்த போது, எதிர்பாராதவிதமாக பிஸ்டல் வெடித்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் படுகாயம் அடைந்தார்.
ஈரோடு : சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் துப்பாக்கிகளை சோதனை செய்த போது, எதிர்பாராதவிதமாக பிஸ்டல் வெடித்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் படுகாயம் அடைந்தார்.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் (32), நேற்று சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, 9 மி.மீ., பிஸ்டலை சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில், பிரேம்குமார் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட வனத்துறையினர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் (32), நேற்று சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, 9 மி.மீ., பிஸ்டலை சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில், பிரேம்குமார் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட வனத்துறையினர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.