திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காதப்புள்ளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுரேஷ் பாண்டி, சிரிவளன் மற்றும் சிவனேசன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராஜபாண்டி பலத்த காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த மூவரும் வத்தலகுண்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காதப்புள்ளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுரேஷ் பாண்டி, சிரிவளன் மற்றும் சிவனேசன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராஜபாண்டி பலத்த காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த மூவரும் வத்தலகுண்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.