புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை : புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி முன்பு அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி முன்பு அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மருதமலை அருகே உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்பு சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறினர். அதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவி ரஞ்சனி கண்ணம்மா கூறுகையில், "புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், கல்வி அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். மேலும், 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுமுறை கொண்டுவரப்படும். இதில், மாணவர்கள் தேர்ச்சியடையாமல் போனால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதோடு, சிறப்பாக செயல்படாத கல்லூரிகள் நூலகமாக மாற்றவும் இந்த புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது," என்றார். 

இதேபோல, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தினால், சுமார் 25,000 சதுர கி.மீட்டர் தொலைவில் உள்ள காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...