நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கூலித் தொழிலாளி காட்டெருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கூலித் தொழிலாளி காட்டெருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த மிளிதேன் கிராமத்தைச் சேர்ந்த பேபி (35) என்ற பெண் கூலித் தொழிலாளியை, அங்கு வந்த காட்டெருமை கடுமையாக தாக்கியது. இதில், அவருக்கு கை மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் பேபியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டெருமைகளின் நடமாட்டம் குறித்து பலமுறை வனத்துறைக்கு தகவல் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த மிளிதேன் கிராமத்தைச் சேர்ந்த பேபி (35) என்ற பெண் கூலித் தொழிலாளியை, அங்கு வந்த காட்டெருமை கடுமையாக தாக்கியது. இதில், அவருக்கு கை மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் பேபியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டெருமைகளின் நடமாட்டம் குறித்து பலமுறை வனத்துறைக்கு தகவல் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று குற்றம்சாட்டியுள்ளனர்.