கோவை : அரசு மடிக்கணினி வழங்காதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக வந்த எஸ்.எஃப்.ஐ. தலைவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கோவை : அரசு மடிக்கணினி வழங்காதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக வந்த எஸ்.எஃப்.ஐ. தலைவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
அரசின் இலவச மடிக்கணினி இன்னும் வழங்கப்படாத நிலையில், சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் ராஜாவும் அங்கு வந்திருந்தார். மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உருவாகாமல் இருக்கும் வண்ணம், தினேஷ் ராஜாவை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, மாணவர்களிடம் பேச அவர் அனுமதி கேட்டார், ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்கு அனுமதி கொடுக்குமாறு போலீசாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதற்கும் அனுமதி மறுத்த போலீசார், அவரை வேனில் ஏற்றினர். அப்போது, மடிக்கணினி வழங்கப்படாத பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் ராஜா கோரிக்கை விடுத்தார்.