கிளார்க் பணிக்கான இடஒதுக்கீட்டு விவகாரம் : கோவை எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தை நாளை முற்றுகையிட த.பெ.தி.க. முடிவு

கோவை : எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டு விவரத்தைக் கண்டித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை நாளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கோவை : எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டு விவரத்தைக் கண்டித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை நாளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கின்றது. 8,600 கிளார்க் வேலைக்கான இடஒதுக்கீடு கட் ஆப் மதிப்பெண்களை எஸ்.பி.ஐ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 28 மதிப்பெண் என கட் ஆப் நிர்ணயம் செய்துள்ளது. மிக மிக பின்தங்கிய மக்களுக்கு இல்லாத சலுகையை உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ. வழங்கியுள்ளது. இது 97 சதவீத மக்களுக்கு எதிரானது.

பள்ளி பாடங்களில் 35 மதிப்பெண் தேர்ச்சி என்ற நிலையில் பொருளாதாரத்தின் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 28 மதிப்பெண் என வைத்து இருப்பது சமூகநீதிக்கு கேடானது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் இந்த நடவடிக்கையினை கண்டித்து கோவை ரயில்நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை நாளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்த இருக்கின்றோம், எனத் தெரிவித்தார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...