கோவை : திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தி மூட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியிடம் மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்
கோவை : திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தி மூட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியிடம் மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 69 வார்டு பகுதியான புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அதில், திறந்த வெளியில் கிடக்கும் இந்த பாதாள சாக்கடையில் பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், 15 அடி ஆழம் கொண்ட இந்த சாக்கடையின் அருகே குழந்தைகள் விளையாடி வருவதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் பாதாள சாக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மசால் லே-அவுட் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோவை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 69 வார்டு பகுதியான புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அதில், திறந்த வெளியில் கிடக்கும் இந்த பாதாள சாக்கடையில் பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், 15 அடி ஆழம் கொண்ட இந்த சாக்கடையின் அருகே குழந்தைகள் விளையாடி வருவதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் பாதாள சாக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மசால் லே-அவுட் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோவை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.