நீலகிரி : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அருகே குட்டிக் கரடிகள் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அருகே குட்டிக் கரடிகள் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூரிலிருந்து அளக்கரை அரவேணு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திலிருந்து சாலையில் உலா வந்தது. அதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் எடுத்தனர். இந்த கரடிகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் 30 நிமிடம் வரை குட்டிகளுடன் உலாவி விட்டு பின்னர் மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூரிலிருந்து அளக்கரை அரவேணு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திலிருந்து சாலையில் உலா வந்தது. அதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் எடுத்தனர். இந்த கரடிகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் 30 நிமிடம் வரை குட்டிகளுடன் உலாவி விட்டு பின்னர் மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.