நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோத்தகிரியை சுற்றியுள்ள 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகளைத் தேடி குடிமகன்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், கிராம மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பார் வசதியில்லாததால், குடிமகன்கள் கடை முன்னே மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையில் போட்டுவிடுவதாலும், மதுக்கடை அருகே பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி, நியாய விலை கடை உள்ளதால் அடிப்படைத் தேவைகளுக்காக செல்வதே அவர்களுக்கு சிரமமாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விரைவில் 8 ஊர் கிராம மக்களுடன் கலந்தாலோசித்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரியை சுற்றியுள்ள 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகளைத் தேடி குடிமகன்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், கிராம மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பார் வசதியில்லாததால், குடிமகன்கள் கடை முன்னே மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையில் போட்டுவிடுவதாலும், மதுக்கடை அருகே பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி, நியாய விலை கடை உள்ளதால் அடிப்படைத் தேவைகளுக்காக செல்வதே அவர்களுக்கு சிரமமாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விரைவில் 8 ஊர் கிராம மக்களுடன் கலந்தாலோசித்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.