நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியத்தில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.
நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியத்தில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.

பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியம் (CANTONMENT BOARD) சார்பில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று 100-க்கும் மேற்பட்ட பாளைய வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் வாரிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில், வெலிங்டன் கன்டொன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி. பலிச்சா தலைமையில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜி மென்டால் மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வாரிய துணைத் தலைவர் பாரதியார் பேசுகையில், "கார்கில் போரில் வெற்றி பெற்று 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடும் வகையிலும், போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இந்த ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது," என தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியம் (CANTONMENT BOARD) சார்பில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று 100-க்கும் மேற்பட்ட பாளைய வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் வாரிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில், வெலிங்டன் கன்டொன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி. பலிச்சா தலைமையில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜி மென்டால் மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வாரிய துணைத் தலைவர் பாரதியார் பேசுகையில், "கார்கில் போரில் வெற்றி பெற்று 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடும் வகையிலும், போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இந்த ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது," என தெரிவித்தார்.