நீலகிரி : முறையான சாலை வசதி இல்லாததால், உயிரை பிணையம் வைத்து வனவிலங்குகள் செல்லும் பாதைகளை பயன்படுத்தி வருவதாகவும், தார் சாலை அமைத்து தர வேண்டும் என குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி : முறையான சாலை வசதி இல்லாததால், உயிரை பிணையம் வைத்து வனவிலங்குகள் செல்லும் பாதைகளை பயன்படுத்தி வருவதாகவும், தார் சாலை அமைத்து தர வேண்டும் என குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை உள்ளது. இங்கு தார் சாலை மிகவும் மோசமாகி விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் சாலைகள் அமைக்கப்படாததால் யானைகள் மற்றும் வனவிலங்குகள் செல்லும் பாதையில் பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சைக்காகவும், பேருந்து வசதிக்காகவும் சுமார் 7 கிலோ மீட்டர் முதல் 14 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்வதில்லை.
அவசர காலங்களில் சேலாஸ் பகுதியில் உள்ள ஜீப் 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் சேலாஸ் பகுதியில் உள்ள பேருந்து நிழல் குடையில் தங்கி செல்கின்றனர். எனவே, சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்தப் பணிகளும் நடைபெறாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், "இப்பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையான பக்காசூரன் மலை சாலை நிறைவடைந்து விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான ஆனைப்பள்ளம் சாலைப்பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, இந்த சாலைப் பணியும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும்," என தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை உள்ளது. இங்கு தார் சாலை மிகவும் மோசமாகி விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் சாலைகள் அமைக்கப்படாததால் யானைகள் மற்றும் வனவிலங்குகள் செல்லும் பாதையில் பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சைக்காகவும், பேருந்து வசதிக்காகவும் சுமார் 7 கிலோ மீட்டர் முதல் 14 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்வதில்லை.
அவசர காலங்களில் சேலாஸ் பகுதியில் உள்ள ஜீப் 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் சேலாஸ் பகுதியில் உள்ள பேருந்து நிழல் குடையில் தங்கி செல்கின்றனர். எனவே, சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்தப் பணிகளும் நடைபெறாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், "இப்பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையான பக்காசூரன் மலை சாலை நிறைவடைந்து விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான ஆனைப்பள்ளம் சாலைப்பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, இந்த சாலைப் பணியும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும்," என தெரிவித்தார்.