கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரதி ராஜா மற்றும் மாணிக்கராஜ். பொறியியல் பட்டதாரிகளான இருவரும் இன்று மாலை தனது நண்பர்களை காண அன்னூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜே.ஜே. நகர் அருகே வந்து கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பாரதிராஜா மற்றும் மாணிக்கராஜ் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பாரதிராஜா தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாணிக்கராஜூம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் நிகழ்விடத்திற்கு உயிரிழந்த பாரதிராஜாவின் உடலை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரதி ராஜா மற்றும் மாணிக்கராஜ். பொறியியல் பட்டதாரிகளான இருவரும் இன்று மாலை தனது நண்பர்களை காண அன்னூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜே.ஜே. நகர் அருகே வந்து கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பாரதிராஜா மற்றும் மாணிக்கராஜ் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பாரதிராஜா தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாணிக்கராஜூம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் நிகழ்விடத்திற்கு உயிரிழந்த பாரதிராஜாவின் உடலை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.