கர்நாடகா அரசியல் குழப்பம் எதிரொலி : பெங்களூரூவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

பெங்களூரூ : கர்நாடாகவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான கணக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெங்களூரூவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூ : கர்நாடாகவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான கணக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெங்களூரூவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இன்று மாலை வரை அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், பெங்களூரூவில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பெங்களூரூ காவல் ஆணையர் அலோக் குமார் பிறப்பித்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவையான விதானா சவுதாவை சுற்றி நிற்க முதற்கட்டமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெங்களூரூ மாநகர் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் காரணமாக, மதுபானக் கடைகள் மற்றும் சொகுசு மதுபான விடுதிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரூ காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...