20 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

நீலகிரி : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யாததால் நாளுக்குநாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள தாலுகாவாக குன்னூர் தாலுகா உள்ளது. இங்கு நகரப்பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில் 10 அடி மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. இதனால், நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குன்னூர் நகராட்சி தடுமாறி வருகிறது. பல இடங்களுக்கு மாதக்கணக்காக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குன்னூர் நகரில் 8 மற்றும் 9-வது வார்டுகளில் 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அங்கு வந்த நகராட்சி அதிகாரியையும் சூழந்து தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை அதிகாரி தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாளை மறுநாள் குடிநீர் வழங்குவதாக அதிகாரி உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...