நீலகிரி : உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
நீலகிரி : உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்று விட்டு வணிக வளாகங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, விதிமீறிய கட்டிடங்களால் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் இருப்பதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஓர் ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதகையில் உள்ள கமர்சியல் சாலை, மெயின் பஜார், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக உதகை நகராட்சியின் நகர திட்ட அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.