கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இரத்த நாள அறுவை சிகிச்சை : மருத்துவமனையின் முதல்வர் அசோகன் பெருமிதம்

கோவை : தனியார் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் மதிப்பில் செய்யப்படும் இரத்த நாள அறுவை சிகிச்சை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக பயனாளிக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

கோவை : தனியார் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் மதிப்பில் செய்யப்படும் இரத்த நாள அறுவை சிகிச்சை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக பயனாளிக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது. 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. முந்தைய நாட்களில் முக்கியமான இருதய அறுவை சிகிச்சைகள் செய்ய சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால், தற்போது கோவை அரசு மருத்துவமனையிலேயே அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இரத்தநாள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 



இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :- ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் பழனிச்சாமி. தமணி நாளம் வீக்கம் ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக வந்திருந்தார். சுமார் 1.5 சென்டி மீட்டர் விட்டம் இருக்க வேண்டிய தமணி நாளம், இவருக்கு சுமார் 10 மடங்கு பெரிதாகி 15 சென்டி மீட்டரில் இருந்தது. உடனடியாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு,, கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் 10 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, தற்போது காப்பீட்டு திட்டம் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டும் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...