திருப்பூர் : பல்லடம் அருகே இன்டிகேட்டரை போட்டு திரும்பிய காரின் மீது மோதியதால் நிலைதடுமாறி சென்ற தனியார் பேருந்தை சாலையோர மரம் தாங்கி பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் : பல்லடம் அருகே இன்டிகேட்டரை போட்டு திரும்பிய காரின் மீது மோதியதால் நிலைதடுமாறி சென்ற தனியார் பேருந்தை சாலையோர மரம் தாங்கி பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் உடுமலை நோக்கி விசாலாட்சி என்ற தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. கேத்தனூர் பகுதியில் சென்றிருந்த போது, முன்னே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு இன்டிகேட்டர் போட்டு விட்டு வலதுபுறமாக திரும்பியது. அப்போது, அந்த வாகனத்தை முந்த முயன்ற தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நிலைதடுமாறிச் சென்ற பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதி நின்றதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், காரில் யாருக்கும் காயங்களும் இன்றி அதிஷ்டவசமாக தப்பித்தனர். இவ்விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.