இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



கடந்த 17-ம் தேதி உதகையில் உள்ள மெயின் பஜார் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிரகாஷ் (33) என்ற இளைஞரை நகை கடை ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த படகு இல்லம் மோகன் என்பவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த அந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என படுகர் இன மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இளைஞரை தாக்கியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதி கூறியதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், நடவடிகைகள் தாமதமாகும் பட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....