நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த 17-ம் தேதி உதகையில் உள்ள மெயின் பஜார் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிரகாஷ் (33) என்ற இளைஞரை நகை கடை ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த படகு இல்லம் மோகன் என்பவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த அந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என படுகர் இன மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இளைஞரை தாக்கியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதி கூறியதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், நடவடிகைகள் தாமதமாகும் பட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடந்த 17-ம் தேதி உதகையில் உள்ள மெயின் பஜார் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிரகாஷ் (33) என்ற இளைஞரை நகை கடை ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த படகு இல்லம் மோகன் என்பவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த அந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என படுகர் இன மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இளைஞரை தாக்கியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதி கூறியதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், நடவடிகைகள் தாமதமாகும் பட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.