நீலகிரி : உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த 108 ஆம்லன்ஸ் வாகனம், பிருந்தாவன் பள்ளி அருகே ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி : உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த 108 ஆம்லன்ஸ் வாகனம், பிருந்தாவன் பள்ளி அருகே ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

உதகையில் இருந்து குன்னூர் பணிமனைக்கு பிரேக் சரி செய்வதற்காக சென்ற 108 ஆம்லன்ஸ் வாகனத்தை சந்தீப் (30) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, பிருந்தாவன் பள்ளி அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, நிலைத்தடுமாறி அருகில் இருந்த ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஓட்டுநர் சந்தீப் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் யாரையும் ஏற்றி வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உதகையில் இருந்து குன்னூர் பணிமனைக்கு பிரேக் சரி செய்வதற்காக சென்ற 108 ஆம்லன்ஸ் வாகனத்தை சந்தீப் (30) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, பிருந்தாவன் பள்ளி அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, நிலைத்தடுமாறி அருகில் இருந்த ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஓட்டுநர் சந்தீப் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் யாரையும் ஏற்றி வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
