கோவையில் கேபிள் ஆபரேட்டர் கொலை வழக்கு : தேநீர் கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

கோவை : கேபிள் ஆபரேட்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கேபிள் ஆபரேட்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கோவை கீரணத்தம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் கோபி. அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவிக்கும், கேபிள் ஆபரேட்டர் கோபிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இதனையறிந்த ராமச்சந்திரன் கோபியை கண்டித்து உள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே 5-ம் தேதி ராமச்சந்திரன் கோபியுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்தி கோபியை கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராமச்சந்திரனைச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கேபிள் ஆபரேட்டரை கொலை செய்த தேநீர் கடை உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...