கோவை : லாலி ரோடு அருகே கோவில் திருவிழாவிற்காக அடைக்கப்பட்ட புழக்கத்தில் இருந்து வந்த சாலையை, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
கோவை : லாலி ரோடு அருகே கோவில் திருவிழாவிற்காக அடைக்கப்பட்ட புழக்கத்தில் இருந்து வந்த சாலையை, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

பாப்பநாயக்கன்புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- லாலி ரோடு சிக்னல் அருகே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வருடம் கோவில் திருவிழாவின் போது மூடப்பட்ட இந்த சாலை இதுவரை திறக்கப்படவில்லை. மருதமலை, வடவள்ளி, பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த பாதையை உபயோகித்து வந்தனர். பிரதான சாலையை அடையவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இது உபயோகமாக இருந்த நிலையில், திருவிழாவின் போது மூடப்பட்ட சாலை திறக்கப் படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி புழக்கத்தில் இருந்த சாலை சந்திப்பு தடையை அகற்றிட வேண்டும், என மனு அளித்தனர்.

பாப்பநாயக்கன்புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- லாலி ரோடு சிக்னல் அருகே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வருடம் கோவில் திருவிழாவின் போது மூடப்பட்ட இந்த சாலை இதுவரை திறக்கப்படவில்லை. மருதமலை, வடவள்ளி, பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த பாதையை உபயோகித்து வந்தனர். பிரதான சாலையை அடையவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இது உபயோகமாக இருந்த நிலையில், திருவிழாவின் போது மூடப்பட்ட சாலை திறக்கப் படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி புழக்கத்தில் இருந்த சாலை சந்திப்பு தடையை அகற்றிட வேண்டும், என மனு அளித்தனர்.