கோவை : தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட வேண்டும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து அவ்வமைப்பினர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வேட்பாளர்கள் உறுதி அளித்தனர். தற்போது இது குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், சட்டமன்றத்தில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த சிறப்புக் கூட்டம், மாவட்டங்களை இரண்டாக பிரித்து மாற்றி அமைப்பது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், தங்களது நீண்ட நாள் கோரிக்கை குறித்த நடவடிக்கைகள் இல்லை. தங்களது கோரிக்கையை சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், உள்ளாட்சி தேர்தலின் போது தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழும் பகுதியில் தேர்தல் நடத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றனர்.

உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட வேண்டும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து அவ்வமைப்பினர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வேட்பாளர்கள் உறுதி அளித்தனர். தற்போது இது குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், சட்டமன்றத்தில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த சிறப்புக் கூட்டம், மாவட்டங்களை இரண்டாக பிரித்து மாற்றி அமைப்பது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், தங்களது நீண்ட நாள் கோரிக்கை குறித்த நடவடிக்கைகள் இல்லை. தங்களது கோரிக்கையை சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், உள்ளாட்சி தேர்தலின் போது தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழும் பகுதியில் தேர்தல் நடத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றனர்.