கோவை : கோவையில் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் சாலை பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). பாக்சிங் வீராங்கனையான இவர், கடந்த 1-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். யுரேகா தற்கொலைக்கு அவரது கல்லூரி நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டி வரும் அவரது பெற்றோர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யுரேகாவின் புகைப்படம் மற்றும் அவர் பெற்ற பதக்கங்களுடன் மனு அளிக்க வந்தனர்.
அப்போது மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாக்சிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்த யுரேகாவை, தொடர்ந்து பாக்சிங் விளையாடக் கூடாது எனவும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் இறப்பிற்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மாணவியின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவியின் உருவப் படத்தையும், அவர் பெற்ற பதக்கங்களுடன் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சாலை பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). பாக்சிங் வீராங்கனையான இவர், கடந்த 1-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். யுரேகா தற்கொலைக்கு அவரது கல்லூரி நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டி வரும் அவரது பெற்றோர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யுரேகாவின் புகைப்படம் மற்றும் அவர் பெற்ற பதக்கங்களுடன் மனு அளிக்க வந்தனர்.
அப்போது மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாக்சிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்த யுரேகாவை, தொடர்ந்து பாக்சிங் விளையாடக் கூடாது எனவும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் இறப்பிற்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மாணவியின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவியின் உருவப் படத்தையும், அவர் பெற்ற பதக்கங்களுடன் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.