நீலகிரி : குன்னூரில் உள்ள பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைளை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் வருவாய் துறையினர் இன்று இடித்து அப்புறப்படுத்தினர்.
நீலகிரி : குன்னூரில் உள்ள பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைளை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் வருவாய் துறையினர் இன்று இடித்து அப்புறப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் ஓடை புறம்போக்கு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாத காலமாக படிப்படியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்த சில கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டு பழமை வாய்ந்த கடைகளை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.
குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும் சூழலில், ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஓடை புறம்போக்கு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாத காலமாக படிப்படியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்த சில கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டு பழமை வாய்ந்த கடைகளை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.
குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும் சூழலில், ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.