திருப்பூர் : 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்றும், இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சி அமையும் என திருப்பூரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்றும், இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சி அமையும் என திருப்பூரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு, அரசு மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. எதிர்கட்சி அந்தஸ்தை கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும், பிரதமர் கனவில் இருந்த முன்னாள் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர். மேலும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள் இதன் மூலம், வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றும் தோல்வியடைந்த நிலையிலேயே உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் நம் சார்ந்த ஆட்சியே அமைந்துள்ளது. அதில், த.மா.காவிற்கும் பங்கு உண்டு. விவசாயிகள் நலனைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்த முயற்சித்தால், அதனை த.மா.கா. எதிர்க்கும். மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய பாலமாய் இருப்போம், எனக் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு, அரசு மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. எதிர்கட்சி அந்தஸ்தை கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும், பிரதமர் கனவில் இருந்த முன்னாள் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர். மேலும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள் இதன் மூலம், வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றும் தோல்வியடைந்த நிலையிலேயே உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் நம் சார்ந்த ஆட்சியே அமைந்துள்ளது. அதில், த.மா.காவிற்கும் பங்கு உண்டு. விவசாயிகள் நலனைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்த முயற்சித்தால், அதனை த.மா.கா. எதிர்க்கும். மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய பாலமாய் இருப்போம், எனக் கூறினார்.