கோவையில் இளம் ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளை ரயில் நிலையம் அருகே கான்போரை முகம்சுளிக்க வைத்தது.



கோவை ரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளையில் ஈடுபட்ட காட்சி காண்போரை முகம்சுளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பல்வேறு கட்சிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில், தினத்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் மதுபோதைக்கு நாளுக்கு நாள் அடிமையாகிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை இரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று ஆண், பெண் என்ற பேதமின்றி மதுபோதையில் தள்ளாடியபடி நடத்து சென்று அப்பகுதியில் செல்வோரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் வாகனஒட்டிகளிடம் அநாகரிகமாக நடத்துக்கொண்டதும் மது மயக்கத்தில் அந்த இளம்பெண் சாலை ஒர சுவற்றில் மோதி, சரிந்துவிழும் காட்சிகளும் காண்போரை முகம்சுளிக்க வைத்தது. இதையடுத்து அங்குதிரண்ட கூட்டத்தில் ஒரு சிலர் அப்பெண்ணை தூக்க முற்பட்டதால் ஆத்திரம் அடைந்தஅவருடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தநிலையில் அவ்விருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். கோவை மாநகரின் முக்கிய இடமான ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...