நீலகிரி : உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் தாமதமாக சீரமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நீலகிரி : உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் தாமதமாக சீரமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடித்துள்ள மலை சிகரமான தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்று உதகையின் ரம்மியமான காட்சிகளையும், அழகிய இயற்கை காட்சிகளை தொலைநோக்கி மூலம் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை. இந்த நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சுமார் 3 கி.மீ. தூரம் சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சாலை குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து, அவ்வப்போது வனத்துறையினர் சாலைகளில் குழிகளை தற்காலிகமாக சீரமைத்தாலும், மழை காலங்கள் மற்றும் வாகனங்கள் மீண்டும் செல்வதால் சாலைகள் பழுதடைந்து வருவது வாடிக்கையாகவே இருந்து வந்தது.
எனவே, இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் மலைப் பகுதி சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 1 கோடியே 90 லட்சம் செலவில் தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் நடைபெற்று வந்த சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் காரணங்களால் இச்சாலைப் பணியை முழுமையாக முடிக்காமல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொட்டபெட்டா பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கானோரின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடித்துள்ள மலை சிகரமான தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்று உதகையின் ரம்மியமான காட்சிகளையும், அழகிய இயற்கை காட்சிகளை தொலைநோக்கி மூலம் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை. இந்த நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சுமார் 3 கி.மீ. தூரம் சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சாலை குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து, அவ்வப்போது வனத்துறையினர் சாலைகளில் குழிகளை தற்காலிகமாக சீரமைத்தாலும், மழை காலங்கள் மற்றும் வாகனங்கள் மீண்டும் செல்வதால் சாலைகள் பழுதடைந்து வருவது வாடிக்கையாகவே இருந்து வந்தது.
எனவே, இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் மலைப் பகுதி சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 1 கோடியே 90 லட்சம் செலவில் தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் நடைபெற்று வந்த சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் காரணங்களால் இச்சாலைப் பணியை முழுமையாக முடிக்காமல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொட்டபெட்டா பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கானோரின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.