தனியார் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து கோவையில் முதலமைச்சரிடம் பெற்றோர் மனு

கோவை : பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் கோவை விமான நிலையம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் மனு அளித்தனர்.

கோவை : பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் கோவை விமான நிலையம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் மனு அளித்தனர். 

கோவை பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). இவர் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துசண்டை போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற இவரை, கல்லூரியின் விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், துறை தலைவர் ராஜசங்கர், துறை ஆசிரியர் ஷாஜகான் ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அளித்து வந்ததாகவும், தலித் சமூகம் என்கிற காழ்ப்புணர்ச்சியில் நடந்துக்கொண்டதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். இதன் காரணமாகவே யுரேகா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி யுரேகாவின் பெற்றோர் கோவை விமானநிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....