கோவை : கோவை மாநகரை தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை : கோவை மாநகரை தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் சமூக விரோதிகளின் மூலம் மறைமுகமாக விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பான் மசாலா குட்கா பொருட்களை கடத்தி வந்து அவர்களது குடோனில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பான்மசாலா குட்காவை ஒழிக்கும் முயற்சியில் ஏற்கனவே உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் விற்பனைகள் ஒழிந்த பாடில்லை.
இதில், கோவை மாநகரை பொறுத்தவரை வைசியாள் வீதி, ரங்கே கவுண்டர் வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் பான் மசாலா குட்கா பொருட்களை அதே பகுதியில் குடோன்களில் மறைத்து வைத்துள்ளனர். அதேபோல, புறநகர் பகுதிகளிலும் பதுக்கி வைக்கின்றனர். இப்படி பதுக்கப்படும் பான்மசாலா குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை பிடித்தும் இந்த சமூக விரோதிகளின் செயல்பாடுகளில் மாற்றம் நிகழவில்லை.
இந்த நிலையில், கோவை மாநகரை பான்மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தீவிரம் காட்டி வருகிறார். கோவை மாநகரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கோவை மாநகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 'கோட்பா' எனப்படும் சிகரெட், மற்றும் பிற புகையிலை பொருட்கள் தயாரிப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 4 நாட்களில் மட்டும் 76, 105, 58, 33 என மொத்தம் 272வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி நடைபெறும் தொடர் நடவடிக்கைகள் மூலம் குட்கா விற்பனை முழுதும் ஒழிக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் சமூக விரோதிகளின் மூலம் மறைமுகமாக விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பான் மசாலா குட்கா பொருட்களை கடத்தி வந்து அவர்களது குடோனில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பான்மசாலா குட்காவை ஒழிக்கும் முயற்சியில் ஏற்கனவே உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் விற்பனைகள் ஒழிந்த பாடில்லை.
இதில், கோவை மாநகரை பொறுத்தவரை வைசியாள் வீதி, ரங்கே கவுண்டர் வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் பான் மசாலா குட்கா பொருட்களை அதே பகுதியில் குடோன்களில் மறைத்து வைத்துள்ளனர். அதேபோல, புறநகர் பகுதிகளிலும் பதுக்கி வைக்கின்றனர். இப்படி பதுக்கப்படும் பான்மசாலா குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை பிடித்தும் இந்த சமூக விரோதிகளின் செயல்பாடுகளில் மாற்றம் நிகழவில்லை.
இந்த நிலையில், கோவை மாநகரை பான்மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தீவிரம் காட்டி வருகிறார். கோவை மாநகரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கோவை மாநகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 'கோட்பா' எனப்படும் சிகரெட், மற்றும் பிற புகையிலை பொருட்கள் தயாரிப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 4 நாட்களில் மட்டும் 76, 105, 58, 33 என மொத்தம் 272வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி நடைபெறும் தொடர் நடவடிக்கைகள் மூலம் குட்கா விற்பனை முழுதும் ஒழிக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.