நீலகிரி : நீலகிரி மாவட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மேரக்காய் பந்தல்களில் யானைகள் தஞ்சம் புகுந்தால் அப்பகுதி மக்கள் பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மேரக்காய் பந்தல்களில் யானைகள் தஞ்சம் புகுந்தால் அப்பகுதி மக்கள் பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இவை அவ்வப்போது அருகிலுள்ள மஞ்சூர், கெத்தை முள்ளி, டெராமியா ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேரக்காய் பந்தல்களில் முகாமிட்டு, அங்கு விளைந்துள்ள மேரக்காய்களை பறித்து உண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. யானைகளை இப்பகுதி மக்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இப்பகுதி மக்கள் யாரும் பணிக்கு செல்லாமல் இவற்றை வேடிக்கை மட்டும் பார்த்து செல்கின்றனர். சில மணிநேரம் இங்கிருந்த யானைகள் தானாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற பிறகு தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பணியினைத் தொடர்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இவை அவ்வப்போது அருகிலுள்ள மஞ்சூர், கெத்தை முள்ளி, டெராமியா ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேரக்காய் பந்தல்களில் முகாமிட்டு, அங்கு விளைந்துள்ள மேரக்காய்களை பறித்து உண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. யானைகளை இப்பகுதி மக்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இப்பகுதி மக்கள் யாரும் பணிக்கு செல்லாமல் இவற்றை வேடிக்கை மட்டும் பார்த்து செல்கின்றனர். சில மணிநேரம் இங்கிருந்த யானைகள் தானாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற பிறகு தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பணியினைத் தொடர்ந்தனர்.
