கோவை : உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை : உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகே உம்பா என்ற கிராம பகுதியில் 36 ஏக்கர் நில தகராறு காரணமாக குஜ்சர் மற்றும் கூண்ட் பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கிராம தலைவர் யோகா தத் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியின் உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற போது, அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்காவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று சிறை வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பிரியங்கா காந்தி கைதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயூரா ஜெயகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஆறுதல் கூற சென்றவரை தடுத்து நிறுத்தி கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசு சர்வாதிகார போக்கோடு செயல்படுகின்றனர். இதே நிலை, தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வீனஸ் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகே உம்பா என்ற கிராம பகுதியில் 36 ஏக்கர் நில தகராறு காரணமாக குஜ்சர் மற்றும் கூண்ட் பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கிராம தலைவர் யோகா தத் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியின் உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற போது, அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்காவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று சிறை வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பிரியங்கா காந்தி கைதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயூரா ஜெயகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஆறுதல் கூற சென்றவரை தடுத்து நிறுத்தி கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசு சர்வாதிகார போக்கோடு செயல்படுகின்றனர். இதே நிலை, தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வீனஸ் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.