ஓசையின் சார்பில் நடைபெற்ற 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி இன்று நிறைவு பெற்றது

தன்னார்வலர் அமைப்பான ஓசையின் சார்பில் கோவை கோட்ட தமிழ்நாடு அரசு வனத்துறை, மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டொபர் 4ம் தேதி முதல் தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அரியவகை பறவை மற்றும் விலங்கு இனங்கள், வண்ணத்து பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், மனித விலங்கு மோதல் குறித்தான படங்களும் இடம்பெற்றிருந்தன. உயிர் நிழல் 2016 என்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கண்டு ரசித்துச் சென்றனர். 

இந்தக் கண்காட்சியின் நிறைவு நாள் அக்டோபர் 9ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓசை அமைப்பின் அமைப்பாளர் ச. அகிலா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக கண்காட்சி நாட்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, விடாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிபெற்றோர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...