கோவை : கோவையில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவையில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக ஜே.பி. நட்டா பதவி ஏற்றதுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் முன்பு பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அந்த சாலை வழியாக சென்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் உடனடியாக அகற்றப்பட்ட வேண்டும் என டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான வாக்குவாதத்திற்குப் பிறகு அந்த பேனர் அகற்றப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறுகையில், "தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உடனடியாக அபராதம் விதிக்கும் காவல்துறை, மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நீதிமன்ற உத்தரவையும் மீறி இதுபோன்று பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என குற்றம் சாட்டினார். இதன் பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக ஜே.பி. நட்டா பதவி ஏற்றதுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் முன்பு பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அந்த சாலை வழியாக சென்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் உடனடியாக அகற்றப்பட்ட வேண்டும் என டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான வாக்குவாதத்திற்குப் பிறகு அந்த பேனர் அகற்றப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறுகையில், "தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உடனடியாக அபராதம் விதிக்கும் காவல்துறை, மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நீதிமன்ற உத்தரவையும் மீறி இதுபோன்று பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என குற்றம் சாட்டினார். இதன் பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.