வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை : வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திருப்பூர் மகிளா நீதிமன்றம்

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவருக்கும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவண ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் சரவண ராஜ்குமார், யமுனா தேவியை அவரது பெற்றோரிடம் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார். மேலும், இதற்காக அவரை துன்புறுத்தியுள்ளார். 



இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி யமுனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, புகாரின் பேரில் முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் யமுனா தேவி வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில் சரவண ராஜ்மாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...