வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை : வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திருப்பூர் மகிளா நீதிமன்றம்

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவருக்கும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவண ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் சரவண ராஜ்குமார், யமுனா தேவியை அவரது பெற்றோரிடம் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார். மேலும், இதற்காக அவரை துன்புறுத்தியுள்ளார். 



இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி யமுனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, புகாரின் பேரில் முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் யமுனா தேவி வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில் சரவண ராஜ்மாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...