திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தினை முறையாக அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தினை முறையாக அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.சி / எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தினை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும், கடந்தாண்டு அவினாசி திருமலைக் கவுண்டம்பாளையத்தில் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பம்மாள் வழக்கில் ஒரு வருட காலமாகியும் தீர்வு கிடைக்காத நிலையில், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.சி / எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தினை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும், கடந்தாண்டு அவினாசி திருமலைக் கவுண்டம்பாளையத்தில் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பம்மாள் வழக்கில் ஒரு வருட காலமாகியும் தீர்வு கிடைக்காத நிலையில், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கலந்துகொண்டனர்.