நீலகிரி : உதகையில் நீதிமன்ற பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி செந்தில் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி : உதகையில் நீதிமன்ற பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி செந்தில் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில்முரளி. இவரது மனைவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காங்கயம் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியர், நீதிபதி செந்தில்முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக துறை ரீதியாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில்முரளி. இவரது மனைவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காங்கயம் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியர், நீதிபதி செந்தில்முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக துறை ரீதியாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.