கோவை : செம்புக்கரை மலைக்கிராமத்தின் அருகே சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : செம்புக்கரை மலைக்கிராமத்தின் அருகே சுமார் 18 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் இருந்து சிறிது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுன்கரை பள்ளம் பகுதியில் யானையின் உடல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்புக்கரை கிராமம் வழியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத காரணத்தால், கேரளாவின் எல்லை கிராமமான மூலாங்கல் வழியாக கொடுன்கரை பள்ளத்திற்கு சென்று யானையின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, யானை இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் எனத் தெரிய வந்தது. இதனிடையே, யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
