திருப்பூரில் தனியார் சாயக்கழிவு நீர் தொட்டியில் விழுந்து கர்நாடகா தொழிலாளி பலி

திருப்பூர் : திருப்பூரில் தனியார் சாய சலவை பட்டறையில் வேலை செய்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சாயக்கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் சாய சலவை பட்டறையில் வேலை செய்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சாயக்கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 



திருப்பூர் மன்னரை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான துணிகளுக்கு நிறமேற்றக்கூடிய சாய சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் துணிகளை நிறமேற்றக்கூடிய பணிகள் நடைபெறும். நிறமேற்றிய பின்பு சாயக்கழிவு நீர் அங்குள்ள தொட்டிக்குள் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். 



இந்த நிலையில், பாய்லரில் எரிக்கக்கூடிய மரங்களை வெட்ட வந்த தொழிலாளர்களில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் மதியம் மரம் வெட்டும் பணியினை முடித்து விட்டு, சாயக்கழிவு நீர் இருந்த தொட்டியின் திட்டின்மேல் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, தொட்டிக்குள் விழுந்துள்ளார். சாயக்கழிவு நீர் தொட்டிக்குள் 5 அடி அளவில் இருந்த காரணத்தால் பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசாரின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...