கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



நேற்று முன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், இந்த போஸ்டரில் தமிழக அரசின் சுகாதாரத் துறையே மருத்துவமனை முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடு என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, மருத்துவக் கல்லூரியில் உணவு விடுதியில் நடக்கும் ஊழல்கள் மீது நீதி விசாரணை நடத்து எனவும், மருத்துவமனையின் முதல்வர் ஊழியர்களிடம் சாதி ஆணவத்தோடு நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 



இந்த நிலையில், போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்த பொழுது ரோந்து பணியில் வந்த போலீசார், அனுமதி இன்றி ஒட்டியதாக போஸ்டர்களை பறிமுதல் செய்தும், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளையும், பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், கட்சியின் தெற்கு சட்ட மன்ற நிர்வாகி பாலசிங்கத்தின் மீது போலீசார் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...