கோவை : சிவானந்தா காலனி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : சிவானந்தா காலனி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்க நகை வியாபாரிகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் வலம் வருகிறது. மேலும், இந்த கும்பல்கள் பாலக்காடு சாலையை மையமாக வைத்து, தனது குற்ற சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில், தற்போது மாநகருக்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் நண்பரான விக்னேஷ், கிராமுக்கு 200 ரூபாய் குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கோவைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் உக்கடத்தில் இருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா காலனிக்கு வந்தனர். இந்த நிலையில், சிவானந்தா காலனியில் சிவா என்பவரை சந்தித்தபோது, அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இன்னோவா காரை காண்பித்து, அதில் வியாபாரிகள் இருக்கிறார்கள் உள்ளே அமர்ந்து பேசிக்கொள்ளவும் என்றுள்ளார். அப்போது, இவர்கள் காருக்குள் சென்ற போது உள்ளே இருந்து நபர்கள் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பணத்தை தரும்படி கேட்டுக் கொண்டனர். அதில், ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால், அதனை நம்பிய நவ்சாத், தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, விசாரிப்பது போல காரில் சுற்றி திரிந்த அந்த கும்பல் திடீரென இருவரையும் காரிலிருந்து வெளியே அப்புறப்படுத்தி விட்டு தப்பி ஓடினர்.
இந்த நிலையில், அதிர்ச்சியடைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் சிவானந்தா காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்க நகை வியாபாரிகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் வலம் வருகிறது. மேலும், இந்த கும்பல்கள் பாலக்காடு சாலையை மையமாக வைத்து, தனது குற்ற சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில், தற்போது மாநகருக்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் நண்பரான விக்னேஷ், கிராமுக்கு 200 ரூபாய் குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கோவைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் உக்கடத்தில் இருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா காலனிக்கு வந்தனர். இந்த நிலையில், சிவானந்தா காலனியில் சிவா என்பவரை சந்தித்தபோது, அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இன்னோவா காரை காண்பித்து, அதில் வியாபாரிகள் இருக்கிறார்கள் உள்ளே அமர்ந்து பேசிக்கொள்ளவும் என்றுள்ளார். அப்போது, இவர்கள் காருக்குள் சென்ற போது உள்ளே இருந்து நபர்கள் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பணத்தை தரும்படி கேட்டுக் கொண்டனர். அதில், ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால், அதனை நம்பிய நவ்சாத், தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, விசாரிப்பது போல காரில் சுற்றி திரிந்த அந்த கும்பல் திடீரென இருவரையும் காரிலிருந்து வெளியே அப்புறப்படுத்தி விட்டு தப்பி ஓடினர்.
இந்த நிலையில், அதிர்ச்சியடைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் சிவானந்தா காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.