நீலகிரி : உதகை படகு இல்ல ஏரியில் இரண்டு இளைஞர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி : உதகை படகு இல்ல ஏரியில் இரண்டு இளைஞர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த கெளதம் (24) மற்றும் டென்னிஷ் (24) ஆகியோர் கடந்த ஞாயிறன்று காணாமல் போயிருந்தனர். இவர்களை தங்களது உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், இது தொடர்பாக காந்தல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்று காலை உதகை தேனிலவு படகு ஏரியில் இருவரும் சடலமாக மிதப்பதாக அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா..? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா..? என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த கெளதம் (24) மற்றும் டென்னிஷ் (24) ஆகியோர் கடந்த ஞாயிறன்று காணாமல் போயிருந்தனர். இவர்களை தங்களது உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், இது தொடர்பாக காந்தல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்று காலை உதகை தேனிலவு படகு ஏரியில் இருவரும் சடலமாக மிதப்பதாக அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா..? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா..? என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.