திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (50). இவர் வடுகபாளையம் சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலாட்சி அவிநாசியை அடுத்து ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், வீட்டின் மாடியில் குழாய் அடைத்திருப்பதை சுத்தம் செய்து கொண்டிருந்த லோகநாதன், முதல் மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்ட முயற்சித்துள்ளார். அப்போது, நிலை தடுமாரி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் லோகநாதன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, லோகநாதன் மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சி.சி.டி.வி. ஆதாரங்களை கொன்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.